மாமன் வந்தான்
மடியில தூக்கி வச்சான்
மருமக இவதான்னு மகிழ்ச்சியோட
மாருதட்டிக் கொண்டாடினான்...
வருஷம் பதினைந்தில்
வாண்டு வளர்ந்து
வாழைக்குமரியாச்சு...
சத்தியம் செஞ்ச மாமன்
சந்ததிய பெருக்க வருவான்னு
கூடப்பொறந்தவ கொண்டாடினா..
கால மாறிப்போச்சு
வாழ்வும் மாறிப்போச்சு
பேச்சும் மாறிப்போச்சு..
செஞ்ச சத்தியமும்
சக்கரைப் பொங்கலாகிப்போச்சு.....
No comments:
Post a Comment