Tuesday, April 2, 2013

சிட்டுக்குருவிக்கூடு!!

Inline image 1

சிட்டாக வீட்டுக்குள்
சிறகை விறித்துப்
பறந்த குருவி
சட்டென கீழே வீழ்ந்து
செத்தேவிட்டது ஒருநாள்..

தன்னைவிட அழகாய்
பறக்கிறதென
தன்னுள் அகப்பட்ட
குட்டி குருவியை
சுற்றி வீசியது
அந்த காற்றாடி..

நான் இங்கே குருவி எங்கே..
வாசலின் மேல்கூரையில்
கட்டிவைத்து விட்டுச்சென்ற கூடு
வினா எழுப்புகிறது இன்றும்..

(உலக சிட்டுக்குருவிகள் தினத்தன்று)
சிறை..

காற்றடைத்த பலூன்போல
நம்நினைவுகள் சுமந்து
பறக்கும் என்னை
மெல்ல மெல்ல
குறைய விடாமல்
உன்சுவாசம் சிறைவைத்து
உயிர்வாழ்கிறாய் என்னுள்!

முத்தம் தின்பவன் நீ
முழுவதும் நிறைபவள் நான்!!
ஞாபகம்!!



நீயும் நானும் ஓடி
விளையாடி ஊஞ்சளாடிய
பழையகதை பேசிப்பேசியே
பொழுதைக்கழிக்கின்றது
நம் வீட்டு தோட்டத்து
புளியமரமும்
கட்டிக்கொண்ட
ஊஞ்சலும்!!

உன் நினைவுகள்
கடற்கரையின்
கால்சுவடுகளல்ல..
என் மனக்கடலின்
காலச்சுவடுகள்...

எப்போதும் உன் வாசம்
காற்றில்
மெல்ல வீசி வருகிறது..
எப்போது
நாம் குடிபெயர்வது
நம்முள்ளே....
அழகியல்!!



கண்டதும் இயல்பாகவே
கைகள் ஏந்தி நடனமாடி
இசையைப்போல்
அழைக்கிறாள்..

அருகில் சென்று
அணைத்து முத்தமிட
பூமுகம்  மலர்கிறாள்..

தத்துப்பித்துவென தனக்கான
மொழியில் பேசி சிரித்து
என்னை தன் வசப்படுத்தும்
அழகியல் அவள்!!
ப்ரேயர் டைம்!!

Inline image 1

கீழிறங்கி
உருண்டு பிரண்டு
கைகள் ஊண்டி
கால்கள் மடக்கி
நெற்றிமுட்டி
தலைத்தூக்கி
பிரார்த்திக்கும்
இவளின் அழகில்..
அன்று தனிமையில்
தவித்திருந்த மனது
இன்று இனிமையில்
மகிழ்கிறது...
இறைவனுக்கு நன்றி!!
பின்னால போகும் வண்டி..

Inline image 1

வீட்டுக்குள்ள ஒரு வண்டி
பின்னாலதான் போகுது
எல்லாரையும்  தாண்டி..

ஆளக்கண்டா முறைக்குது
சிரிக்குது மயக்குது...
மயங்குறேன்..

மூக்குபோயி முன்னால
முட்டுது முணங்குது ..
கொஞ்சினால் குழாவுது..

பிஞ்சுக்கையில அகப்பட்ட
முகத்தை வாரியெடுத்து
வாய்குள்ள வைக்கயில
ஊத்துற வானியில வந்த வாசத்துல
பறக்குற மனச அள்ளிக்கிட்டு...
மறுபடியும் பின்னாலதான் போகுது
இந்த அதிசய வண்டி!!










விளக்கு அணைத்திருக்கும்
விடியல்வரை விழித்திருக்கும்
மின்மினி அவள்..
மனதுக்கு வெளிச்சம் தரும்
இனிய கண்மனியும் அவள்!!

புருவமும் கண்களும் மூக்கும் வாயும்
பேச நினைக்கும் பாஷைகளோடு
கலந்துவிட்டாள் என் நெஞ்சோடு..

என்மீது அமர்ந்து அவள்
அழகு புன்னைகை சிந்திவிடுவாள்..
கட்டுப்படா என்
உறக்கத்தின் திறவுகோலது..
கள்ளச்சிரிப்பழகி
கண்ணுறங்கும் வேலையிலே
என் காலையையும் பூட்டிவிட்டது
இன்பமான நினைவாலே!!