Tuesday, March 30, 2010

விளையாட்டாய் ஒரு வேலை!

கல்லூரி வகுப்பறையில் நட்பில் மூழ்கி
அரட்டை அடித்து கொண்டிருந்த நேரம்!
வந்தது ஒருகூட்டம் போட்டது பலபிட்டை
தந்தது ஒருபேப்பரை எழுதச்சொன்னது அவரவர்
பேரை ஊரை ஃபோன் நம்பரை!

கழிந்தது சிலதினம் ஒலித்தது செல்மணி
எதிரொலித்ததது ஒருகுரல் பெயருடன்
தன் நோக்கத்தையும் அதே பிட்டுடன்!

எதிர்பாராமல் பிடித்தேன் அக்குரலை
கதைத்தது என் இளநிலைக்கல்லூரித் தோழி!
உடனே அழைத்தால் அவள் அலுவலகம்
சென்றேனங்கே.. கிடத்தது ஒரு வாய்ப்பு
எனக்கு மிகவும் பிடித்த என் முதல் வேலை!

அறக்கபறக்க ஓட வேண்டும் கல்லூரி முடிந்ததுமே!
யாரேனும் உடன்வர வேண்டும் அவ்வளவு தூரம்!
திரும்பி வர வேண்டும் இரவு நேரம்!
யோசிக்கவில்லை அதன் பாரம்!..

சிறிய பட்டாளம்முதல்
பெரிய பட்டாளம்வரை
நடத்த வேண்டும் பல பாடம்
கற்றேன் நானும் பல பாடம்!

என் சந்தோஷத்தின் தொடக்கம் அங்கே
அவர்களின் மேடமென்ற வார்த்தையில்!
ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்த சம்பளம்
அளித்ததெனக்கு மிகப்பெரிய மனபலம்
அதோடு நிற்கக்கூடாதென்ற தைரியகுணம்!

படிப்பிலிருந்து பாடம்வரை!!

அப்பாவ இழந்த பின்னே

அக்காக்களும் அண்ணன்களும்

அம்மாவுக்கு இருந்தும்

ஆதரவுக்கரம் நீட்ட ஆருமில்லை..


படிப்புக்கு ஆசைப்பட்டு தவித்தேன்

படித்தே ஆகனும்னு அடம்பிடித்தேன்

திண்டாடித்தான் போனாள் என் அம்மா..


அக்கறைக்கு குறைவில்லை

அவசரமாய் நடக்கப்பதற்கு

அப்படியோர் வழியுமில்லை..


ஆண்டவனின் ஆசியினால்

அள்ளித்தந்தான் ஒரு வாய்ப்பை..

ஆன்றோரின் கருணையினால்

ஆறு வருஷம் போயே போச்சு..


படிச்சு முடிச்சு சேர்ந்தாச்சு வேலைல

சேர்க்கப்பட்டேன் அதே கல்லூரியில்

எதையுமே ஆராய முடியாமல்...


அன்பான நண்பர்களின் தூண்டுதலில்

அவசரமாய் நானும்தான் போனேனே

அடக்கமாய் அவர்களிடம் கேட்டெனே

போதாத சம்பளத்த உயர்த்ததான்..


எங்களால படிச்சுப்புட்டு

எங்களுக்கு சேவை செய்ய

மனமில்லை உனக்கென...

தீ போல வார்த்தைல சுட்டதனால்

சட்டென வந்தேனே திரும்பித்தான்..


வாங்கிக் கட்டிய வார்த்தையின்

ரணமின்னும் நீங்கவில்லை..

வந்துவிட்டேன் கடல் கடந்து..

வாங்குகிறேன் கைநிறைய

போதுமென்ற திருப்தியுடன்..


மறுபடியும் அதே அன்பான தோழி

அழைக்கிறாள் தொலைபேசியில்

ஆரோக்கியம் அனைத்தும் விசாரித்து

ஆக்ரோஷமாய் சொல்கிறாள்

அந்த ஆன்றோருக்கு

அளிக்க வேண்டும் அதே

வார்த்தை தீயை வாவென..


ஆச்சர்மாய் அமைதியாய்

அடங்கித்தான் போன்னேன்

அவள் முன்னாள்...

அனைத்தும் இருக்கிறது அவளிடம்

ஆனாலும் எனக்கென பேசிய

அவ்வார்த்தை இதயத்திற்கு

இதமளித்தது அந்நேரம்!!


ஆன்றோர் எனக்கு அளித்த கல்வியை

மறக்காமல் அனைத்தையும் மறந்தேன்..

ஆண்டவனை மட்டும் மனதில்கொண்டு..




Tuesday, March 23, 2010

தவறு!

வெட்டுக்கிளி நானும்தான்

விவரமேதும் தெரியாம

வேடிக்கயாய் செய்துவிட்ட

வீரியமில்லா காரியமெண்ணி

வெடவெடத்துப் போனேனே..

வில்லங்கம் வருமென்ற

விவகாரத்த நெனச்சுத்தான்...

விக்கி விக்கி நின்னாலும்

விம்மி விம்மி அழுதாலும்

வீரம் மட்டும் குறையாது

வேஷமிடத் தெரியாது..

வந்தாரெல்லாம் வலிகொடுக்க

வாய்ச்சாரே ஒருத்தர் மட்டும்

வாயார மனதார

வாசகம்தான் சொன்னாரே....

பழி சொல்லும் ஊருக்கு

வழி சொல்லத் தெரியாது...

பெண்ணே நீ புறப்படு

பொன்னான காலம் தேடி........

விண்ணைத்தான் தொடுவாயே

விண்மீன்தான் பறிப்பாயே........

நன்றிதனை நானுறைப்பேன்

நாட்கள்தான் நகர்ந்தாலும்!

Monday, March 8, 2010

சில்லுனு ஒரு மழைக்குப்பின்!


வானமும் பூமியும்
அடித்துக்கொண்டு
அடங்கி ஒடுங்கி

சமாதானமான அந்நேரம்..
அருகே அழைத்தாய்

வந்தேன் நான்

அமைதியாய் ஆசையாய்..

கேளாமல் நீ எதிர்பார்த்த

ஒற்றைக் காப்பியுடன்..

மழை ஒன்றும் புதிதல்ல
வரும்போதெல்லாம்

புதிய விருந்தாளியாகிறது

மனதிற்கு விருந்துமளிக்கிறது..
அன்றேனோ அப்படியொரு குளிர்..

மனசு மயங்கும் மாலைநேரம்!

வீசும் லேசான ஈரக்காற்று

இதமாய் எனைத்தள்ளி

அள்ளிக்கொண்டு போகாமல்

தாங்கி அனைப்பாயா?

ஏங்கினான் அவன்..
உனக்குள்ளும் அதே
எண்ணமா? கண்டேன்
அவன் கண்களில்!

சூடான காபியின்பின்
இதமான உன்சூட்டை
எனக்களிக்க முந்தினாய்!
அன்று காபியின் சுவைகூட
கூடித்தான் போனது......!!