Tuesday, April 2, 2013

சிட்டுக்குருவிக்கூடு!!

Inline image 1

சிட்டாக வீட்டுக்குள்
சிறகை விறித்துப்
பறந்த குருவி
சட்டென கீழே வீழ்ந்து
செத்தேவிட்டது ஒருநாள்..

தன்னைவிட அழகாய்
பறக்கிறதென
தன்னுள் அகப்பட்ட
குட்டி குருவியை
சுற்றி வீசியது
அந்த காற்றாடி..

நான் இங்கே குருவி எங்கே..
வாசலின் மேல்கூரையில்
கட்டிவைத்து விட்டுச்சென்ற கூடு
வினா எழுப்புகிறது இன்றும்..

(உலக சிட்டுக்குருவிகள் தினத்தன்று)