Monday, March 8, 2010

சில்லுனு ஒரு மழைக்குப்பின்!


வானமும் பூமியும்
அடித்துக்கொண்டு
அடங்கி ஒடுங்கி

சமாதானமான அந்நேரம்..
அருகே அழைத்தாய்

வந்தேன் நான்

அமைதியாய் ஆசையாய்..

கேளாமல் நீ எதிர்பார்த்த

ஒற்றைக் காப்பியுடன்..

மழை ஒன்றும் புதிதல்ல
வரும்போதெல்லாம்

புதிய விருந்தாளியாகிறது

மனதிற்கு விருந்துமளிக்கிறது..
அன்றேனோ அப்படியொரு குளிர்..

மனசு மயங்கும் மாலைநேரம்!

வீசும் லேசான ஈரக்காற்று

இதமாய் எனைத்தள்ளி

அள்ளிக்கொண்டு போகாமல்

தாங்கி அனைப்பாயா?

ஏங்கினான் அவன்..
உனக்குள்ளும் அதே
எண்ணமா? கண்டேன்
அவன் கண்களில்!

சூடான காபியின்பின்
இதமான உன்சூட்டை
எனக்களிக்க முந்தினாய்!
அன்று காபியின் சுவைகூட
கூடித்தான் போனது......!!

No comments:

Post a Comment