அப்பாவ இழந்த பின்னே
அக்காக்களும் அண்ணன்களும்
அம்மாவுக்கு இருந்தும்
ஆதரவுக்கரம் நீட்ட ஆருமில்லை..
படிப்புக்கு ஆசைப்பட்டு தவித்தேன்
படித்தே ஆகனும்னு அடம்பிடித்தேன்
திண்டாடித்தான் போனாள் என் அம்மா..
அக்கறைக்கு குறைவில்லை
அவசரமாய் நடக்கப்பதற்கு
அப்படியோர் வழியுமில்லை..
ஆண்டவனின் ஆசியினால்
அள்ளித்தந்தான் ஒரு வாய்ப்பை..
ஆன்றோரின் கருணையினால்
ஆறு வருஷம் போயே போச்சு..
படிச்சு முடிச்சு சேர்ந்தாச்சு வேலைல
சேர்க்கப்பட்டேன் அதே கல்லூரியில்
எதையுமே ஆராய முடியாமல்...
அன்பான நண்பர்களின் தூண்டுதலில்
அவசரமாய் நானும்தான் போனேனே
அடக்கமாய் அவர்களிடம் கேட்டெனே
போதாத சம்பளத்த உயர்த்ததான்..
எங்களால படிச்சுப்புட்டு
எங்களுக்கு சேவை செய்ய
மனமில்லை உனக்கென...
தீ போல வார்த்தைல சுட்டதனால்
சட்டென வந்தேனே திரும்பித்தான்..
வாங்கிக் கட்டிய வார்த்தையின்
ரணமின்னும் நீங்கவில்லை..
வந்துவிட்டேன் கடல் கடந்து..
வாங்குகிறேன் கைநிறைய
போதுமென்ற திருப்தியுடன்..
மறுபடியும் அதே அன்பான தோழி
அழைக்கிறாள் தொலைபேசியில்
ஆரோக்கியம் அனைத்தும் விசாரித்து
ஆக்ரோஷமாய் சொல்கிறாள்
அந்த ஆன்றோருக்கு
அளிக்க வேண்டும் அதே
வார்த்தை தீயை வாவென..
ஆச்சர்மாய் அமைதியாய்
அடங்கித்தான் போன்னேன்
அவள் முன்னாள்...
அனைத்தும் இருக்கிறது அவளிடம்
ஆனாலும் எனக்கென பேசிய
அவ்வார்த்தை இதயத்திற்கு
இதமளித்தது அந்நேரம்!!
ஆன்றோர் எனக்கு அளித்த கல்வியை
மறக்காமல் அனைத்தையும் மறந்தேன்..
ஆண்டவனை மட்டும் மனதில்கொண்டு..
No comments:
Post a Comment