Sunday, February 21, 2010

!சூழ்நிலைக்கவிதை!

இவர்கள் ஏன் இப்படி?!

கடகடவென காப்பிகூட
குடிக்காமல் காலையில்
சாலையை கடந்து
வேலைக்கு செல்லும்
வேளையில் குறுக்குவழிப்
பூங்காவில் என்மனம்
நோகும் சில காட்சிகளால்!

பாவாடையும் தாவணியும்
சேலையும சுடிதாரும்
சகிதம் உலாவிய நம்மூர்
அழகுப்பெண்கள்
ஏனோ இங்கிப்படி
நாகரீக மோகமாக
முட்டிக்கால் ஜீன்ஸும்
ஸ்லீவ் லெஸ்ஸுமாக
ஆண்களும் நடந்து
ஆர்ப்பரிக்கும் காலையில்
வாக்கிங் ஜாக்கிங் என்று
தன்னையே காண்பித்து
எதற்கிந்த அறங்கேற்றம்?!
இவர்கள் ஏன் இப்படி?!

காலை முதல் மாலை வரை
கண்கள் பல காண்கிறேன்..
எங்கெல்லாமோ பார்க்கின்றன..
பல நேரங்ககளில் ஏனோ
பார்க்கின்றன என
எண்ணம் எனக்குள்..
காண்பவை அனைத்தும்
வக்கிரமாகவே கண்கூடாக...
அப்படி ஒன்றுமில்லை
கண்கவர்ச்சிக்கு...
உணரவேண்டுமவர்கள்..
அவர்களொன்றும் காட்சிப்
பொருளல்லவென...
இவர்கள் ஏன் இப்படி?!

பாண்பாடு மறந்து
பார்க்கும் இடமெல்லாம்
கையும் இடையும்
கோர்த்துக் கதைத்துத்
திரியும் ஜோடிகள்
காதலர்கள் இல்லையாம்..
கணவன் மணைவியாம்....
இவர்கள் ஏன் இப்படி?!

No comments:

Post a Comment